Friday, May 14, 2010

தியாகி இம்மானுவேல் சேகரனின் பெயரை மதுரை விமான நிலையத்திற்கு சூட்ட வலியுறுத்தி புதிய தமிழகம் கட்சியின் சார்பாக உண்ணாவிரத போராட்டம்......


தியாகி இம்மானுவேல் சேகரனின் பெயரை மதுரை விமான நிலையத்திற்கு சூட்ட வலியுறுத்தி புதிய தமிழகம் கட்சியின் சார்பாக உண்ணாவிரத போராட்டம் நடத்துவது என்று கடந்த மாதம் திருச்சியில் நடைபெற்ற கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அதன்படி புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் க.கிருஷ்ணசாமி அவர்கள் தலைமையில் மதுரை மேலமாசி வீதி-வடக்கு மாசி வீதி சந்திப்பில் உண்ணாவிரத போராட்டம்நடைபெற்றது


முன்னதாக டாக்டர் கிருஷ்ணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

மதுரை விமான நிலையத்திற்கு தியாகி இமானுவேல் பெயரை சூட்டக்கோரி புதிய தமிழகம் கட்சி சார்பில் மாபெரும் உண்ணாவிரதம் நடத்தப்படுகிறது. இமானுவேல் சேகரனை பொறுத்தவரை இந்திய சுதந்திரத்திற்கு பிறகு சமூக சீர்திருத்த போராளியாக விளங்கினார்.

இதனால் அவரது மறைவிற்கு பிறகு சட்டமன்றத்தில் அறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராஜர், பெரியார் ஆகியோர் புகழ்ந்து பேசி இருக்கிறார்கள். அவருடைய புகழுக்கு மேலும் வலு சேர்க்கும் வகையில் மதுரை விமான நிலையத்திற்கு அவரது பெயரை சூட்ட வேண்டும். எனவே இந்திய அரசும், தமிழக அரசும் இமானுவேல் சேகரனார் பெயரை சூட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். நடவடிக்கை எடுக்காவிட்டால் எங்களது போராட்டம் தொடரும்.இவ்வாறு அவர் கூறினார்.

இந்த உண்ணாவிரத போராட்டத்தில்மாநில மாணவர் அணி செயாலாளர் வ்ழக்கறிஞர் மதுரம் பாஸ்கர் சென்னை துறைமுகம் புதிய தமிழகம் பொதுசெயலாளர் கண்ணன்,மதுரை மாவட்ட செயலாளர்கள் ராமசாமி, எம்.பன்னீர் செல்வம், பாண்டியராஜன்,முனியாண்டி, சிற்றரசு,டிமிட்ரோ,ஆம்புலன்ஸ் முனியாண்டி, சுந்தராஜ்,காசிராஜன், முத்துகுமர், மணிகண்டராஜா, கண்ணன், திருநெல்வேலி கட்சியின் மாவட்ட அமைப்பு செயலாளர் சுப்பிரமணியன், இளைஞர் அணி செயலாளர் வீர அரவிந்து, கனேசன்,கருப்பழகு மகளிர் அணி மல்லைகா, முத்துலட்சுமி,மாநகர மாவட்ட அமைப்பு செயலாளர் எட்வர்ட்ராஜன்,தூத்துக்குடி மாவட்டத்தின் சார்பாக பொறுப்பாளர்கள் வழக்கறிஞர் கனகராஜ்,, கருப்பசாமி,பட்டவராயன், கண்ணன், சுடலைமணி, அருள்ராஜ், விருதுநகர் மேற்கு மாவட்ட அமைப்பு செயலாளர் வடிவேல், திரு.பொட்டுபொட்டான்,முன்னாள் அமைப்பு செயலாளர்கள் ராஜாலிங்கம்,ராமராஜ், கோதண்டம், கார்த்திக்ராஜா, மகளிர் அணி காளிஸ்வரி, போக்குவரத்து கழகம் சார்பில் பழனிசாமி,பரமசிவம்,மோகன்குமரமங்கலம், வழக்கறிஞர் குமார்,பவுன்ராஜ், விருதுநகர் கிழக்கு மாவட்ட அமைப்பு செயலாளர் செல்வகுமரேசன், கலைசெல்வன், ராமநாதபுரம் ஐ.கதிரேசன், திருச்சி மாவட்ட அமைப்பு செயலாளர் அய்யப்பன்,மாநகர அமைப்பு செயலாளர் சங்கர்,இளைஞர் அணி முகிலன் தேனி மாவட்ட அமைப்பு செயலாளர் பாலசுந்தராஜ், ஈரோடு ஐமன்னன், கோவை சுப்பிரமணியன் உலகத் தமிழர் மாணவர் பேரியக்கம் சார்பில் ஜெகன் உட்பட உண்ணாவிரத போராட்டத்தில் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான புதிய தமிழகம் கட்சித் தொண்டர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பொட்டுபொட்டான் அவர்கள் பழசாறு கொடுத்து உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்து வைத்தார். இறுதியாக தெய்வம் நன்றி கூறினார்.

No comments: