Thursday, December 18, 2008

வன்கொடுமை




தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் தாலுகா ஆறாம்பண்ணை கிராமம். இஸ்லாமியர், தேவர் மற்றும் பள்ளர் வாழ்ந்து வருகின்றனர். வல்லநாடு முதல் திருவைகுண்டம் வரை அனந்தனம்பிகுரிச்சி, மணக்கரை, தோழப்பந்பண்ணை என தேவர் மட்டுமே உள்ள கிராமங்கள் அருகிலுள்ளது. கடந்த 2004ம் ஆண்டு ஆறாம்பண்ணை கிராமத்தின் கருப்பசாமி(தேவர்) என்பவர் தற்கொலை செய்து கொள்கின்றார். இதற்கு காரணம் கருப்பசாமி வீட்டில் வேலை செய்து வந்த மாரியப்பன்(பள்ளர்) தான் காரணம் என்ற குற்றச்சாட்டினை அவ்வூரில் கட்டப்பஞ்சாயத்து செய்து வரும் மூக்காண்டி(தேவர்) மற்றும் பலர் கூறுகின்றனர். அதுவும் ஆதிக்க சக்திகள் நிறைந்த அந்த ஊரில் மாரியப்பன் கருப்பசாமியின் மனைவியுடன் தொடர்பு வைத்துதான்?? காரணம் என்றனர். (மாரியப்பன் பார்க்கவே பரிதாபமாக உள்ளார்) அத்தோடு மாரியப்பனின் வீட்டைப் பூட்டி சாவியை வைத்துக் கொண்டனர். மாரியப்பன் ஊரைக் காலி செய்து விடுகின்றார். விடவில்லை ஆதிக்க சக்திகள் மாரியப்பனின் உறவினர்களை ஆறாம்பண்ணையினை விட்டு காலி செய்து அருகிலுள்ள அராபத்நகர் என்ற காலனியில் குடியேற வைத்துள்ளனர். மாரியப்பனின் விவசாய நிலங்களை சகோதரர்கள் ராமர்(பள்ளர்), கண்ணன்(பள்ளர்) ஆகியோர் விவசாயம் செய்துள்ளனர். வீட்டைப் பிடுங்கிய கும்பல் விவசாய நிலத்தினையும் கேட்டு அடித்து மிரட்டி, வீட்டின் ஓடுகளை உடைக்க, ராமர்(பள்ளர்) புகாரின் பேரில் மூக்காண்டி(தேவர்), சங்கரபாண்டி(தேவர்) ஆகியோர் கைது செய்யப்படுகின்றனர். 2004 ல் கொடுத்த புகாருக்கு 2008 ஏப்ரலில் தீர்ப்பு வழங்கியது நீதிமன்றம். தீண்டாமை வன்கொடுமை சட்டப்படி மூக்காண்டி(தேவர்), சங்கரபாண்டி(தேவர்) இருவருக்கும் ஒரு ஆண்டு சிறை தண்டனையும் ரூபாய் ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. ஜாமீனில் வெளி வந்த மூக்காண்டி(தேவர்), சங்கரபாண்டி(தேவர்), ராஜா(தேவர்), முருகன்(தேவர்), பெருமாள்(தேவர்), ராமசாமி(தேவர்) ஆகியோர் சேர்ந்து கடந்த 15 தேதி செவ்வாய்கிழைமை மாலை 3.30 மணியளவில் ஆறாம்பண்ணையிலிருந்து எல்.கே.ஜி. படிக்கும் தனது மூண்றரை வயது மகனை பள்ளியில் இருந்து அழைத்துச் செல்லும் போது கண்ணன் (பள்ளர்)(வயது 34 த/பெ சுப்பிரமணியன் ) என்ற முக்கிய சாட்சியினை ' எங்களுக்கு எதிரா கம்ளைன்ட் கொடுக்க துணிஞ்சிட்டிங்கலடா ' என்று அரிவாளால் வெட்டி கொலை செய்துள்ளனர். இவருக்கு சரஸ்வதி என்ற மனைவியும் இரு மகன்களும் உள்ளனர். வெட்டுப்பட்ட கண்ணன் உடலை? காவல்துறை கைப்பற்றி முறப்பநாடு காவல்நிலையத்தில் இரவு 11 மணி வரை வைத்துவிட்டு பின்னர் அவசர, அவசரமாக திருநெல்வேலி மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஒடுக்கப்பட்ட, நசுக்கப்பட்ட மக்களுக்கு ஒரே விடிவு சட்டம் என்று இருந்தவர்களுக்கு இந்த 'ஆதிக்க சக்திகளின் சட்டம்' கொடுத்த பதிலடி "கொலை". இருந்த பத்து வீட்டினையும் காலி செய்து உறவினர்கள் வீடுகளில் அடைக்கலம் புகுந்துள்ளனர் மக்கள். இஸ்லாமிய சகோதரர்கள் ஆதரவுடன்தான் கண்ணன் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. கண்ணன் செய்த தவறு நீதிமன்றத்தில் உண்மையைச் சொன்னது மட்டும்தான். மும்பை குண்டு வெடிப்பில் பலியான 200 இந்தியர்களுக்குக்காக இந்தியா, பாகிஸ்தான் மீது போர் தொடுக்க தயாராகின்றது. இலங்கையில் இனமான அப்பாவி தமிழர்கள் கொல்லப்படுவதற்கு தமிழகம் ஒருசேர குரல் கொடுக்கின்றது. ஆனால், சாதியின் பெயரால் ஆதிக்க சக்திகளால் அன்றாடம் கொள்ளப்படும் இவர்களும் தமிழர்கள்தானே?..... இந்தியர்கள்தானே?...... மனிதர்கள்தானே?...... வன்கொடுமை மற்றும் தீண்டாமை தடுப்புச் சட்டம் பதிவு செய்வது அரிது, தண்டனை கொடுப்பது அதனினும் அரிது, தண்டித்தால் உயிர் பறிக்கும் கொடூரம். அப்படியெனில் அடித்தால் அடிபட வேண்டுமா?.. மானமும், மாண்பும் யாருக்கு?. .. (குறிப்பு : காவல்துறை மூக்காண்டி, ராஜா, ராமசாமி ஆகியோர் மீது மட்டும் வழக்கு பதிந்துள்ளது. இக்கிராம மக்களின் கோரிக்கைகள் 1. இறந்தவரின் குடும்பத்திற்கு சட்டத்தின் படி ரூபாய் ஐந்து லட்சமும், அரசு வேலையும் உடனே வழங்க வேண்டும். 2. போலீஸ் பாதுகாப்பு வேண்டும். 3. குறிப்பிட்ட சாதியினைச் சேர்ந்த காவலர்கள் அதிகம் உள்ள முறப்பநாடு காவல் நிலையத்தில் பணி மாற்றம் நடைபெற வீண்டும். 4. கருங்குளம் - செய்துங்கநல்லூர் பாலம் கடடித்தந்தால் பாதுகாப்பாக வெளியூர் செல்ல முடியும். )........................................................................................


ஜெ.இ.பிரபாகரன்,
குடிமக்கள் சனநாயகம்,
தூத்துக்குடி.

Friday, November 21, 2008

சென்னை அம்பேத்கர் சட்டக்கல்லூரியில் நடந்த வன்முறை சம்பவங்களுக்கு பின்னணியில் உறங்கும் உண்மை!

12.11.2008 அன்று சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்டக்கல்லூரியில் நடந்த வன்முறை சம்பவம் ஒவ்வொருவரையும் உலுக்கியிருக்கிறது. நிச்சயமாக இச்சம்பவம் கண்டிக்கத்தக்கது. எதிர்கால வழக்கறிஞர்களையும், நீதிபதிகளையும் உருவாக்குமிடத்தில் நடந்த சம்பவம் என்பதால், பின்னணியில் நடந்தவற்றை இங்கே பொதுவில் சமர்ப்பிக்க வேண்டியது அவசியமாகிறது.
சட்டக்கல்லூரியில் இதுபோன்ற மோதல்கள் நடைபெறுவது புதிதல்ல. கடந்த நான்காண்டுகளாக பல மாணவர்களின் இதயங்களுக்குள் குமுறிக்கொண்டிருந்த எரிமலை சம்பவத்தன்று வெடித்து சிதறி நெருப்பாறாய் ஓடியிருக்கிறது. சென்னையில் தலைமையகம் அமைத்து இயங்கிக் கொண்டிருக்கும் 'தேவர் பேரவை' சட்டக்கல்லூரியை தொடர்ந்து அவதானித்து வருகிறது. குறிப்பாக தென் தமிழகத்திலிருந்து படிக்க வந்த தேவர் சமுதாய மாணவர்கள் இப்பேரவைக்கு பலிகடாவாக்கப்பட்டு வருகிறார்கள். இம்மாணவர்களைக் கொண்டு 'முக்குலத்தோர் மாணவர் பேரவை' என்ற அமைப்பும் ஏற்கனவே நிறுவப்பட்டிருக்கிறது. முக்குலத்தோர் மாணவர் பேரவையின் முக்கிய நோக்கமே தலித் மாணவர்களை குறிவைத்து தாக்குவதாக இருந்திருக்கிறது.
மற்ற நான்கு அரசு சட்டக்கல்லூரிகளும் 'அரசு சட்டக்கல்லூரி' என்ற பெயரில் இயங்கும்போது சென்னையில் இருக்கும் சட்டக்கல்லூரி மட்டும் ஏன் டாக்டர். அம்பேத்கர் சட்டக்கல்லூரி என்ற பெயரில் இயங்குகிறது என்றும் இப்பேரவை மாணவர்கள் பிரச்சினை செய்து வந்திருக்கிறார்கள். டாக்டர் அம்பேத்கர் ஒரு தலித் என்பதாலேயே அவரது பெயர் நீக்கப்படவேண்டும் என்று கடந்த நான்காண்டுகளாக இவர்களால் பேசப்பட்டு வந்தது. இம்மாணவர்கள் கல்லூரி பெயரை குறிப்பிட வேண்டிய இடங்களிலெல்லாம் 'சென்னை சட்டக்கல்லூரி' என்று மிகக்கவனமாக டாக்டர் அம்பேத்கர் பெயரை தவிர்த்து வந்திருக்கிறார்கள்.
'முக்குலத்தோர் மாணவர் பேரவை'யின் இதுபோன்ற செயல்கள் தேவையில்லாத பிரச்சினைகளையும், வெறுப்புகளையும் இரு தரப்பினரிடையே ஏற்படுத்தி வந்தது. குறிப்பாக சொல்ல வேண்டுமானால் இதுபோன்ற செயல்களின் சூத்திரதாரியாக வன்முறை சம்பவத்தன்று தாக்கப்பட்ட பாரதிகண்ணன் என்ற மாணவர் இருந்திருக்கிறார். கடந்த ஆறுமாதகாலமாகவே கையில் பட்டாக்கத்தியோடு ஐந்து மாணவர்கள் துணையோடே எப்போதும் பாரதிகண்ணன் காட்சியளித்திருக்கிறார். குறைந்தது இரண்டு தலித் மாணவர்களையாவது போட்டுத்தள்ளவேண்டும் என்பது அவரது எண்ணமாக இருந்திருக்கிறது. காவல்துறைக்கு ஏற்கனவே இதுதெரிந்து அவரை கைது செய்திருக்கிறது. அவரிடமிருந்து மூன்று நீளமான பட்டாக்கத்திகள் கைப்பற்றப்பட்டும் இருக்கிறது. ஆயினும் எந்த வழக்கும் பதியப்படாமல் அவர் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார். கல்லூரி நிர்வாகத்துக்கு பாரதிகண்ணனின் இந்த போக்கு தெரிந்தும், அவரை அடக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இச்சூழ்நிலையில் பாரதிகண்ணனும் அவர்களது நண்பர்களும் ஒருமுறை கீழ்ப்பாக்கம் மில்லர்ஸ் சாலையில் அமைந்திருக்கும் டாக்டர் அம்பேத்கர் சட்டக்கல்லூரியில் பயிலக்கூடிய தலித் மாணவர்களுக்கான தங்கும் விடுதியை தாக்கியிருக்கிறார்கள். பாரதிகண்ணன் மீது கொலைமுயற்சி உட்பட குறைந்தது 17 வழக்குகள் இருக்கிறது.
கடந்த அக்டோபர் 30ஆம் தேதி தேவர் ஜெயந்தி வந்தது. முக்குலத்தோர் மாணவர் பேரவை சார்பில் தேவர் ஜெயந்திக்காக ஒட்டப்பட்ட சுவரொட்டியிலும் வழக்கம்போல டாக்டர் அம்பேத்கர் பெயர் தவிர்க்கப்பட்டு 'சென்னை சட்டக்கல்லூரி மாணவர்கள்' என்ற பெயர் இடம்பெற்றிருக்கிறது. அதே தினம் கல்லூரியில் தலித் மாணவர்களை சீண்டுவதும், கிண்டலடிப்பதுமான போக்கு அதிகரித்திருக்கிறது. தட்டிக்கேட்ட தலித் மாணவர்கள் தாக்கப்பட்டிருக்கிறார்கள். நவம்பர் 3ஆம் தேதி தேர்வுகள் தொடங்கிய நிலையில் "எந்த தலித் மாணவராவது கல்லூரிக்குள் நுழைந்தால் தாக்கப்பட்டு கொல்லப்படுவார்கள்" என்று முக்குலத்தோர் மாணவர் பேரவை அறிவித்திருக்கிறது. அறிவித்தவாறே கல்லூரி வளாகத்தில் பேரவையை சேர்ந்த மாணவர்கள் உருட்டுக்கட்டை, இரும்புத்தடிகள், பட்டாக்கத்திகள் ஆகிய ஆயுதங்களோடு சுற்றி வந்தார்கள். தலித் மாணவர்களால் தேர்வு எழுதும் அரங்குக்குள் நுழையமுடியாத நிலை இருந்தது. சில தலித் மாணவர்கள் மட்டும் அவர்களது கண்களுக்கு தப்பி தேர்வு எழுதியிருக்கிறார்கள். இவ்விவரங்கள் வெளிப்படையாக தெரிந்த நிலையிலும் கல்லூரி நிர்வாகமோ அல்லது காவல்துறையோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இப்படிப்பட்ட அசாதாரண சூழலில் தான் கடந்த 12.11.2008 அன்று தங்களின் சுயபாதுகாப்புக்காக தலித் மாணவர்கள் ஆயுதம் ஏந்தி கல்லூரிக்கு வந்திருக்கிறார்கள். தூங்கிக்கொண்டிருந்த கல்லூரி நிர்வாகம் தலித் மாணவர்கள் ஆயுதமேந்தியதுமே விழித்தெழுந்து பிரச்சினையை பெரியதாக்கவேண்டாம் என்று வலியுறுத்தியிருக்கிறது. ஆயுதமேந்திய சில மாணவர்களோ மற்ற தலித் மாணவர்களின் பாதுகாப்புக்காக தான் நாங்கள் ஆயுதமேந்தியிருக்கிறோமே தவிர முக்குலத்தோர் பேரவை மாணவர்களை தாக்க அல்ல என்று விளக்கமளித்திருக்கிறார்கள். தேர்வு எழுத வந்த தலித் மாணவர்களை அடையாளம் கண்டுகொண்ட பாரதிகண்ணன், ஆறுமுகம் மற்றும் அய்யாதுரை உள்ளிட்டவர்கள் குறைந்தது ஐந்து பேரையாவது கொல்லும் நோக்கத்தோடு இரண்டு அடி நீள கத்தியோடு எகிறிக்குதித்து, பலமாக குரலெழுப்பி ஓடிவந்திருக்கிறார்கள். இதைக்கண்ட தலித் மாணவர்கள் சிதறி ஓடியிருக்கிறார்கள்.
துரத்திவந்த பாரதிகண்ணன் மற்றும் ஆறுமுகம் இடையே சித்திரைச்செல்வன் என்ற தலித் மாணவர் மாட்டிக் கொண்டார். சித்திரைச் செல்வனின் தலையை வெட்ட முயற்சித்திருக்கிறார்கள். சித்திரைச்செல்வன் தலையை அசைத்ததால் கத்தி காதில் இறங்கி காது அறுபட்டு ரத்தம் சொட்டியது. சித்திரைச்செல்வனை காப்பாற்ற திரும்ப ஓடிவந்த தலித் மாணவர்களிடையே பாரதிகண்ணனும், ஆறுமுகமும் சிக்கிக் கொண்டார்கள். அன்று நடந்த விரும்பத்தகாத சம்பவத்துக்கு கல்லூரி நிர்வாகமே முழுப்பொறுப்பு. கடந்த நான்கு ஆண்டுகளாக சாதிவெறி கல்லூரி வளாகத்துக்குள் தலைவிரித்து ஆடியும், தலித் மாணவர்கள் இதுகுறித்து பலமுறை சுட்டிக்காட்டியும் எந்த நடவடிக்கையும் நிர்வாகத்தால் எடுக்கப்படவில்லை. பாரதிகண்ணன் போன்ற மாணவர்கள் ஆயுதங்களோடு உலாவுவதை தடுத்து நிறுத்தியிருந்தால் பிரச்சினை வன்முறையாக வெடித்திருக்காது.

உடனடியாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் :
1) சரியான நேரத்தில் நடவடிக்கை எடுக்காமல் வன்முறை ஏற்படும்வரை அமைதி காத்த கல்லூரி முதல்வர் மீதான நியாயமான நடவடிக்கை.
2) சாதி அமைப்புகள் கல்லூரி வளாகத்துக்குள் நுழைந்து மாணவர்களை தூண்டி வன்முறை வெறியாட்டத்தை அரங்கேற்றுவதை கட்டுப்படுத்துதல்.
3) அனைத்து மாணவர்களுக்கும் (குறிப்பாக தலித் மாணவர்களுக்கு) தகுந்த பாதுகாப்பு உடனடியாக வழங்கப்படுதல்.
4) இந்த வன்முறை சம்பவங்களுக்கு பின்னாலிருந்து குளிர்காயும், மாணவர்களுக்குள் சாதிய உணர்வை தூண்டிவிடும் தேவர்பேரவை போன்ற அமைப்புகளின் மீதான உடனடி நடவடிக்கை.
5) ஒருவாரத்துக்கும் மேலாக கல்லூரி வளாகத்துக்குள் ஆயுதங்களோடு சுற்றிவந்து அச்சுறுத்தியவர்களிடமிருந்து மாணவர்களை காக்க தவறிய காவல்துறை அதிகாரிகள் மீதான கடும் நடவடிக்கை.

Tuesday, November 4, 2008

1957 முதுகுளத்தூர் கலவரம்




1957 முதுகுளத்தூர் கலவரமும், அதனைத் தொடர்ந்து அரசின் முயற்சியினால் கூட்டப்பட்ட சமாதானக் கூட்டமும், அதற்கடுத்து மிகப்பெரிய சாதி வெறிப் படுகொலைகளை ராமநாதபுரம் மாவட்டத்தில் உண்டாக்கியது.
இந்தக் கூட்டத்தில், 'இம்மானுவேல் சேகரனும், தானும் சமமாக நாற்காலியில் உட்காருவதா?' எனும் உணர்வில், muthuramalingam உட்காராமல் நின்று கொண்டிருந்தார். (சட்ட சபையில் பி எஸ் சந்தானம் பேசியதில் இருந்து) சமாதானக் கூட்டத்தில் தேவேந்திரர்கள் தலைவரான இம்மானுவேல் சேகரனும், தேவர்களின் தலைவரான முத்துராமலிங்கமும் ஓர் சமாதான அறிக்கையில் கையெழுத்துப் போட்டு அதை மக்களுக்கு 'அமைதி திரும்பிட'வேண்டுகோளாக வைக்கலாம் என கலெக்டர் முன்கை எடுத்தார். இம்மானுவேல் சேகரன் ஒத்துக் கொண்டு கைஎழுத்திட முன் வந்தபோது, இம்மானுவேலை, தமக்கு இணையான தலைவராகவோ, தேவேந்திரர்கள் தலைவராகவோ தம்மால் ஏற்க முடியாது என்று சொன்னார் muthuramalimgam.
"என் அளவு நீ பெரிய ஆளாக, பெரிய தலைவனாக ஆகி விட்டாயா? உன்னோடு சேர்ந்து நானும் இந்தக் கடிதத்தில் கையெழுத்திட வேண்டுமா?" எனச் சொல்லி, muthuramalingam கையெழுத்திட மறுத்துவிட்டு, வெளியே வந்து தாறுமாறாக தம் தொண்டர்களிடம் பேசிடவே, அடுத்தபடியாக இம்மானுவேல் சேகரன் கொலை செய்யப்பட்டார். அவரைக் கொன்ற கொலையாளிகளைப் பிடிக்க போலீசார், கீழத்தூவல் ஊருக்குள் நுழைந்தபோது, போலீசாருக்கும், அங்கிருந்த மறவர்களுக்கும் மோதல் ஏற்பட்டு, போலீசின் துப்பாக்கிப்பிரயோகத்தில் 5 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். உடனே எதிர்க்கட்சிகள் காமராஜ் ஆட்சி மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவந்தன.
அத்தீர்மான விவாதத்தின்போது, அமைச்சர் பக்தவச்சலம் தாக்கல் செய்த அறிக்கையில் muthuramalingam அவர்கள் இம்மானுவேலைக் குறித்து என்ன பேசினார் என்பது குறிப்பிடப்பட்டுள்ளது. அது - "(சமாதான) மகாநாட்டிலிருந்து வெளியே வரும்போது சிறீiya muthuramalingam, இம்மானுவேல் போன்ற Devendrapallan கூட எதிர்த்துப் பேசும்படியாக விட்டு விட்டீர்களே! என்று தம் ஆதரவாளர்களைக் கடிந்து கொண்டார்". கடிந்து பேசிய அக்கோபமே, இம்மானுவேலை வெட்டிப் போட்டது.
அதனை அடுத்து மூண்ட கலவரத்தின்போது கொண்டலாதி எனும் ஊரில் தேவேந்திர மக்கள் குடிநீர் கோரும் கிணற்றில் மண்ணெண்ணெய்யும், மனித மலமும் கொட்டப்பட்டன. தேவமார்கள் தன் சாதி மக்களை அடையாளம் கண்டு கொள்ள மஞ்சள் வேட்டி அணிந்து கொண்டு வேல் கம்புடன் போருக்கு செல்வது போன்று கும்பலாய் சென்று தேவேந்திரர்கள் வீடுகளையும், வைக்கோல் போர்களையும் கொழுத்தினர்.
இது சமயம், muthuramalingam, மதுரை கோரிப்பாளையத்தில் தற்போது அவரின் சிலை அமைந்திருக்கும் இடத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அவர் ஏன் கைது செய்யப்பட்டார் என்பதை விளக்கிய அரசுக் குறிப்பு (நாள் 28/09/1957) கூறுவதாவது:- "ராமநாதபுரம் கலெக்டர் முதுகுளத்தூரில் 10.09.1957 அன்று கூட்டிய அமைதி மாநாட்டில் muthuramalingam கலந்து கொண்டார். தேவேந்திரர்கள் சார்பில் அந்த மாநாட்டில் பேசிய இம்மானுவேல் என்பவரது தலைமை குறித்து அவர் (porombokku muthuramalingam) கேள்வி எழுப்பினார். அந்த மாநாட்டில் தமக்கு இணையான அளவில் ஓர் தேவேந்திரர் முன்வரிசைக்கு வந்து பேசியது தம்மை அவமதித்ததாகும் என்று அவர் (karungali muthuramalingam) கருதினார். இம்மானுவேல் அந்த அளவுக்கு முக்கியத்துவம் அடையுமாறு நீங்கள் ஏன் அனுமதித்தீர்கள்? என்றும், தமக்கு நேர்ந்த இந்த பகிரங்க அவமானம் குறித்து நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? என்றும் muthuramalingam மாநாட்டிலிருந்து வெளியே வந்த பிறகு, தமது சீடர்களைக் கேட்டார். அதற்கு அடுத்த தினமே, muthuramalingathin சீடர்கள் அடங்கிய ஒரு கும்பல் இம்மானுவேலை மறைந்திருந்து தாக்கிக் கொலை செய்தது. muthuramalingathirikku சவால் விடுவதற்கு உனக்கு என்ன தைரியம்? என்று கொலையாளிகளில் ஒருவர் இம்மானுவேலை வெட்டியபோது கேட்டார்."
(தேவேந்திரர்களுக்குத் தாம்தான் தலைவர் என்றும், தானே பல தேவேந்திரர்களுக்கு உதவி செய்திருப்பதாகவும், இம்மானுவேலை அவர்களின் தலைவராகத் தன்னால் ஏற்க இயலாதென்றும் muthuramalingam, அக்கூட்டத்தில் கூறி இருந்தார். சாதி இந்து மனதில் ஆண்டாண்டு காலமாய் வேரோடிய சாதி வெறிதான் தேவேந்திரர்கள் தலைமைத்துவத்தை ஏற்க மறுக்கிறது. இதே போன்று தான், வட்ட மேஜை மாநாட்டில் அம்பேத்கரை, தீண்டப்படாதவர்களின் தலைவராக ஏற்றுக்கொள்ள முடியாதென்று காந்தி வாதிட்டார். சென்ற சட்டசபைத் தேர்தலில், திமுகவின் சாதி இந்துக்கள், கூட்டணியில் இருந்த தலித் கட்சியினரைத் தோற்கடித்தனர்.)
இம்மானுவேல் கொலை வழக்கில் பெருமாள் பீட்டர் என்பவரது சாட்சியம் மிகவும் முக்கியமானது. அப்போது 88 வயதை எட்டியிருந்த பேரையூரைச் சேர்ந்த அவரின் சரித்திரம் சில ஆண்டுகளுக்கு முன்பு தலித் முரசில் வெளிவந்துள்ளது.
நீதிமன்ற விசாரணையில் பீட்டர், தேவருக்கு எதிராக சாட்சி சொன்னார் "ஒரு தேவேந்திர இளைஞர் நம்மை எதிர்த்துப் பேச விட்டு விட்டீர்களே! நீங்கள் மறவர்களா? என்று தமது ஆதரவாளர்களிடம் muthuramalingam கூறியதை நான் கேட்டேன்" என்றார் அவர்.
கீழத்தூவல் துப்பாக்கிச் சூட்டில் 5 மறவர்கள் கொல்லப்பட்டதை அடுத்து, காமராஜர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் வந்தது. அத்தீர்மானத்தின் மீதான விவாதம், தேவரின் பல பரிமாணங்களை சட்டசபைக் குறிப்பேடுகளில் பதிய வைத்துள்ளது. இனி, சட்டமன்றக் குறிப்பேடுகள் பேசட்டும்.
உள்துறை அமைச்சர் பக்தவச்சலம் 26 அக்டோ பர் 1957 அன்று தாக்கல் செய்த அறிக்கையில் இருந்து:
"..The Government received petitions alleging several cases of lawlessness as a result of the inflamatory speeches by muthuramalingam, inciting his followers to harass Devendrars and Nadars...."
கலவரத்தை நிறுத்திட கூட்டப்பட்ட சமாதான மாநாடு பற்றி அந்த அறிக்கை பின்வருமாறு சொன்னது:
"Recognized leaders of the different communities were invited to attend this Conference. It is on record, Sir, that Muthuramalingam who attended the Conference questioned the leadership of one Sri Tyagi Immanuvel Devendrar, Leader of the Devendrar Community, who was representing the Devendrars, muthuramalingam is reported to have asked Tyagi Immanuvel Devendrar whether he could pose as a Leader of the same stature as muthuramalingam, and whether his assurances on behalf of the Devendrars worth having."
"It is also learnt, Sir, that while coming out of the Conference, muthuramalingam chided his followers for allowing even Devendrars like Tyagi Immanuvel Devendrar to talk back to him. The very next day, Tyagi Immanuvel Devendrar was brutally murdered at Paramakudi."
முதுகுளத்தூர் பிராந்தியத்தில் ஜாதிக் கலகத்தை விதைக்க வெறியூட்டும் பேச்சை எங்கெல்லாம் muthuramalingam பேசினார் என்பதை அவ்வறிக்கை பட்டியலிட்டது - இவ்வாறு:
"On 16th September 1957 addressing a public meeting at Vadakkampatti, muthuramalingam refered to the communal strife raging in Mudukulathur and Paramakudi areas. Obviously the reference was to the incidents which had occured at Arunkulam, Keelathooval, Veerambal, Ilanjambur, Irulandipatti and Sandakottai between 10th and 16th September 1957".
கீழத்தூவலில் இம்மானுவேலைக் கொன்ற கொலையாளிகளைப் பிடிக்கப்போன போலீசாருடன் மோதிய மறவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டைப் பற்றி விசாரிக்க அனுப்பப்பட்ட எஸ்.வெங்கடேஸ்வரன் I.C.S. முன்பு ஆஜராக வந்த மக்களை மிரட்டும் வகையில் muthuramalingam, தனது காரினை விசாரணை நடந்த இடத்துக்கெதிரில் நிறுத்தி வைத்து அந்தக் காரிலே அவர் இருந்த செயலையும் பக்தவச்சலத்தின் அறிக்கை அம்மணமாக்கியது.
"In connection with the enquiry by Sri. S. Venkateswaran I.C.S. into the Police firing at keelathooval village through muthuramalingam had orally announced that he and his party would not take part in the enquiry, he seated himself in a car at the entrance of the building where the enquiry was held. This had the effect of preventing witness coming forward to tender evidence which might clash with muthuramalingam's contentions."
திமுக உறுப்பினர் டாக்டர் சத்தியவாணிமுத்து அம்மையாரின் பேச்சில், 1937 தேர்தலில், ஜஸ்டிஸ் கட்சி வேட்பாளரான ராமநாதபுரம் அரசரை எதிர்த்து நின்றபோது தனக்கு வாக்களிக்காத தேவேந்திரர்களுக்கு அவர் (muthuramalingam) செய்த பயங்கரக் கொடுமைகள் குறித்தும், அதற்காக அவர் மீது மதுரை அடிஷனல் மேஜிஸ்திரேட் கோர்ட்டில் நடந்த விசாரணையும் வெளிப்பட்டது. டெபுடி தாசில்தார் சிதம்பரம் முதலியாரின் கால் வெட்டப்பட்டதும், சப்-மாஜிஸ்திரேட் ஒருவர் கொல்லப்பட்டதும் muthuramalingamthin தூண்டுதலால் நடந்தது என்பதும் சட்டமன்ற விவாதத்தின்போது வெளியானது.
திமுக எம் எல் ஏ அண்ணாதுரை பேசும்போது ' muthuramalingam 1933ஆம் வருஷத்திலிருந்தே பாண்டிய மண்டலத்தில் சாதித் துவேஷம் வளர்க்கக் கூடிய வகையில் பிரச்சாரம் செய்து வந்திருக்கிறார்' எனக் குறிப்பிட்டார்.
முதுகுளத்தூர் கலவரத்தில் ஆதிக்க சாதி வெறி தேவர்களிடம், வெட்டுப்பட்டு சாகும்போது கூட தேவேந்திரர்களை சிக்கலில் மாட்டி விட்டு சாகும் அளவிற்கு சாதி வெறி உச்சத்திற்குப் போய் இருந்தது. கலவரத்தில் வெட்டுப்பட்டு சாகப்போகும் சமயத்தில் முத்துராமன் சேர்வை என்ற மறவரிடம் மரண வாக்குமூலம் பெறப்பட்டது. ஒரு மனிதன் சாகும்போது சொல்லும் வார்த்தைகள் பொதுவாக உண்மையாக இருக்கும் என்பது உலகத்தாரிடையே ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று. முத்துராமன் சேர்வையின் மரண வாக்குமூலத்தை அன்றைய உள்துறை அமைச்சர் பக்தவச்சலம் வெளியிட்டார் " நான் ஒரு தேவேந்திரன். தேவேந்திரர்கள் வீட்டை நானே கொளுத்தினேன்". அந்த நபர் செத்த பிறகு, பிணத்தை வாங்க வந்தவர்களோ மறவர்கள். இவ்வாறெல்லாம் சாகும்போது கூட ஒருவன், தேவேந்திரர்களை சிக்கலில் மாட்டி விட்டு சாகும் படி, சாதி வெறியேற்றிவிடும் அளவிற்கு அவர்களின் அன்றைய தலைவர் இருந்தார்.
முதுகுளத்தூர் கலவரம் ஆரம்பமாகும் முன்,முத்துராமலிங்கத் தேவர், தன் சாதி மக்களிடம், "தேவர்கள் தேவர் கடைகளில் மட்டுமே சரக்கு வாங்க வேண்டுமென்றும்","நாடார் கடைகளைப் புறக்கணிக்க வேண்டுமென்றும்" கூறி இருந்தார். இப் பேச்சு, ராம.கோபாலன் வெறியேற்றிவிடும் "இந்துக்கள், இந்துக் கடைகளில் மட்டுமே சரக்கு வாங்க வேண்டும்" எனும் பேச்சுடன் மிகச் சரியாகப் பொருந்துகிறது.இம்மானுவேல் கொலை செய்யப்பட்டதும், இரு தரப்பிலும் மோதல்கள் பூத்து நின்ற வேளையில் பெரியார் ஒருவர் மட்டுமே 'muthuramalingam, காலித்தனம் செய்கிறார்.அந்த ஜாதி வெறியனை பிடித்து உள்ளே போட்டுக் கலவரத்தை நிறுத்துங்கள்' என்று காமராஜருக்கு அறிக்கை மூலம் வேண்டுகோள் வைத்தார்.
சாதியின் பேரால், அடக்குமுறையை ஏவி 'குட்டி சர்வாதிகாரி'யாகத் திகழ்ந்த muthuramalingam, தனது கட்டளைக்குக் கீழ்ப்படிய அடியாள் படை ஒன்றை தேவேந்திரர்கள்/தேவர்கள் மூலம் கட்டி இருந்தார். முன்னாள் ராணுவ வீரரான மவீரன் இம்மானுவேல் தேவெந்திரர் தேவேந்திரர்களிடையே விழிப்புணர்வு ஊட்டி, அவர்களின் முன்னேற்றத்தை ஊக்குவித்தது, தேவரக்கு எரிச்சலை உண்டுபண்ணி, அது பரமக்குடியில் கொலையாக முடிந்ததென்பது வரலாறு.
தேவர் சிலைக்கு மாலை அணிவிக்கவும், தேவர் பூஜைக்கு போய் பங்கு கொள்ளவும் முயலும் அரசியல் தலைவர்கள். தேவர் சமுதாய ஓட்டுகளை குறிவைத்து தான் செய்கிறார்களே தவிர,
ஓட்டு அரசியலின் விபரீதத்தால், கோமாளி நடிகன் விவேக் கூட, அவனிடம் சிறு உரசல் செய்த சன் டிவிக்கு "ஒரு கோடி தேவர்களின் சமூகத்து ஆளாக்கும் நான்" என சவடால் அடிக்க முடிகிறது.
அமைதியாக சற்று நேரம் உட்கார்ந்து சிந்தியுங்கள்...........
தியாகமே உருவாக வாழ்ந்து மடிந்த தேவேந்திர குலம் தழைக்க இன்னொரு இம்மானுவேல் தேவெந்திரர் வேண்டும் ....பார்க்க இயலுமா? .

Sunday, October 19, 2008

HISTORY OF DEVENDRAR

Devendrakulam is the name of a caste in India.They have this name because they are the descendents of Lord Indra, King of the Devas. Majority of the people of this caste are involved in agriculture. The people of this caste are also called by Palla, Pallan, Kudumban, Pannadi, Devendrakulla Vellalar. Though People of this caste claim superiority of their origin, the caste is included in the Scheduled Caste and many of its members were held as agriculture slaves and bonded agriculture labourers during the 17th Century until mid 20th Century.Research done by Dr.K.R.Hanumanthan and extensive research by Thiru.R.Deva Asirvatham and later by Dr.Guruswamy Siddan and others indicate that the people of this caste are the descendents of the famous ancient Tamil Kings Cheras, Cholas, Pandyas and Pallavas who ruled the current Tamilnadu, Kerala, Karnataka, Part of Andra and Maharastra during ancient period and ruled Tamilnadu up to the 16th Century. Most of the ancient, Temples in and around Tamilnadu were built and owned by this community. After the invasion of Vijaynagar Empire and Marata Kings, the Tamil Kings and their community were removed of their title, land and were made as agricultural labourers in their own farms for which they were the then owners. To hide this Historic fact these people who were then called as Mallar (Malla, Mallan) were named as Pallas (Palla, Pallan) and many poems were written during 17,18,19 and beginning of 20th Century in the name of Pallu Poems with the encouragement from Vijayanagar (Nayak) dynasty. Before that period the People were called as Mallas Meaning warrior, Oolavar meaning plougher (farmer) and Vellalar meaning great gift giver. These people were regular farmers and land lords during peace time (Oolavar) and warriors (Mallars) during war time. The Sangam poems written before 1 century BC sing of the Gods Lord Shiva, Godess Umadevi, Lord Tirumal (Lord Vishnu), Godess Lakshimi, Lord Brahma, Godess Saraswati, Lord Muruga (Lord Karthik), Lord Vinayega (Lord Ganesh), Lord Indra as Mallas and as Pandian and Chola Kings. Though the Pallu Poems denigrated the Mallas and also called them as Pallas, they also say that Palla's ancestors were Mallas and sing that the Gods were Mallas and then were Pallas. During 16th Century AD, Nayak King passed a law ordering people not to have any contact with the Pandian dynasity (in general with Mallas) and prevented the 18 communities that supported the Tamil Kings from having contact with one another and from inter-marriage between these communities. (This was the origin of Untouchability and modern caste division in Tamilnadu). The Mallars were ex-communicated, then gradually over the next 300 years, their lands were removed and given to other new formed upper castes that were loyal to Telugu Kings. The Mallars were named as Pallas and were made as agricultural labourers in the land in which they were once owners. Then after a few generations they were made as bonded labourers and then were removed of all basic human rights (Prevented from having education, access to public places and Temples built by their own ancestors, prohibition from wearing Ornaments and dress on the upper part of the body, shoes etc). To hide the truth that all Temples built upto 16th Century AD were built by the ancestors of these people, attempts were made to hide Temple Paintings by redrawing new paintings on the old ones (Tanjavur Periya Koyil, Mariamman Koyil). During 1932 when British gave self-autonomy to Indians, 1000s of new castes sprung up claiming superiority on one over the other. Several actions were directed by other communities to keep the Pallas at a low profile for fear of the other communities (new formed higher castes) loosing their claim for high caste and land ownership. In 1957 the Pallar, Devendrakula Vellalar Community was included to the Scheduled Caste by Kamaraj, then Chief minister of Tamilnadu, owing to the poverty of the community.Day-to-day activity shows evidence of the rich heritage these people had from ancient times. The community people have their own village self government (Panchayat), have special priests for Temples, Barbers, Dobbies, Doctors etc in villages. These people also have their own temples that are called as King Temples. They are also the priests in village Temples, exclusively owned by these people. In ancient temples like Perur, Samayaburam, Tirunelvelli and so on, leaders of this community are brought to the Temple with festivities on Elephant with White Umbrella coverage, playing trumpts and drums and given the first respect during Temple festivals and are asked to touch the TempleCaravan (Thear) first before it comes on procession. These were the privileges only the ancient Tamil Kings had and were passed on to their descendents that still continues. Priests of these ancient Temples accept and agree that the ancestors of DevendraKulathar are the ancient Tamil Kings, Cheras, Cholas Pandyas and Pallavas.There are ownership documents (Pattayam signed during 1500s) that show that the Palani Murugan Temple and numerous ancient Temples belong to people of Devendrakulam. These ancient Temples were built by ancient Tamil Kings thus these documents and respect given to people of this community at these temples bridge the relation between the ancient Kings and the Devendrakula community. Stonescriptures (Kalvettu) and inscription written in the 1500s also claim that the Devendrakulathars are the descendents of the Pandya dynasty.

Tuesday, October 14, 2008

devendrar panpattu sangamam