Thursday, October 22, 2009

தியாகி இம்மானுவேல் சேகரன் 85வது பிறந்த நாள் மற்றும் கன்சிராம் ஜி 3வது நினைவு தின சரித்திர பாத யாத்திரை ...

முதல் நாள் யாத்திரை 09-10-2009 அன்று தேனி சின்னமனூர் தேவேந்திரர் முறை சாவடியில் இருந்து புறப்பட்டு தேனி அருகில் உள்ள அத்திபட்டி கிராமத்தில் பொதுக்கூட்டத்துடன் முடிவடைந்தது. திரு ஜீவன்குமார் அவர்களின் உணர்வுமிக்க பேச்சு அனைவரையும் தட்டி எழுப்பியது .


இரண்டாம் நாள் யாத்திரை


மூன்றாம் நாள் யாத்திரை

நான்காம் நாள் யாத்திரை


ஐந்தாம் நாள் யாத்திரை


ஆறாம் நாள் யாத்திரை



ஏழாம் நாள் யாத்திரை

எட்டாம் நாள் யாத்திரை

ஒன்பதாம் நாள் யாத்திரை





பத்தாம் நாள் யாத்திரை






பதினொன்றாம் நாள் யாத்திரை





பன்னிரெண்டாம் நாள் யாத்திரை



கடைசி நாள் யாத்திரை










இந்த யாத்திரை
கால்களின் வலிக்காக அல்ல
காலத்தின் வலிமைக்காக ...!

Thursday, August 20, 2009

இன்றைய‌இறுதிச்ச‌ட‌ங்குக‌ளை இறுதிச்ச‌ட‌ல‌ங்க‌ளாக்குவோம்.....!

போதும்
இழந்தது போதும்
இழந்து கொண்டிருப்பது
வாழ்க்கையை மட்டுமல்ல
வசந்தமுள்ள வரலாற்றையும்தான் ....!

சிங்களத்து சிப்பாய்களே
நீங்கள் வீரர்கள் அல்ல
வெறியூட்டப்பட்ட வீணடிமைகள்
இது
உங்களது உணர்வுப்போரல்ல
உரிமைப் போரல்ல
இலட்சியப் போருமல்ல
சில
சிங்கள சீரழிப்பாளர்களின்
சினத்தின் கணத்தால்
நடக்கும் தூண்டுதல் போர் ....!

ஏக காலமாய்
எங்கள் உணர்வுகளை
காரி உமிழ்கிறோம்
உமிழ்நீராய் மட்டுமே
அது
உணர்வுநீராய் மாறி
உருவெடுக்கும் முன்
விழித்துக்கொள்ளுங்கள்....!
இது
எதிரிக்கான எச்சரிக்கை ....!

எமது அரசின் நிலையோ
அவமானப்படத்தக்கது
அண்டைவீட்டுத் தமிழனுக்கு
அமைதிபேச்சுவார்த்தையாம்....!
எதிர்வீட்டு சிங்களனுக்கு
ஏவுகணை சப்ளையாம்....!

ஒரு உயிர்ப்படுகொலையை காட்டி
ஓராயிரம் இனப்படுகொலை ....!

அதிகார அக்னிச்சிறகுகளின் கையில்
அப்பாவித் தமிழர்கள்
தடுக்கவேண்டிய தலைமைகள்
தள்ளாடுது மருத்துவமனையில் ....!

சொற்போரில் சொல்லாயுதம் ஏந்தி
சோர்வடைந்த எம் தமிழன்
உயிராயுதம் ஏந்தி
உலகையே விழிக்கச் செய்த
எம் முத்துகுமரன்
திரும்பி வருவானேயானால்
வெற்றிகளையும் வியர்வைகளையும்விட
வேதனைகளே அதிகம் ....!

இறந்த கொள்கையை மறந்து
இளம் நாடார் என பறை சாற்றிய
சாதிச்சங்கங்களுக்கு எமது சவுக்கடிகள் ....!

சிதைந்த உடல்களும்
புதைந்த சடலங்களும்
திரும்பி வருமேயானால்
இருவரை ஏளனமாய் பார்க்கும்
ஒருவன்
சிங்களன்-எதிரியாக
மற்றொருவன்
இந்தியன்-துரோகியாக ....!

இலட்சங்களில் உயிர்களை இழந்தும்
இலட்சியத்தை கைவிடாத
எம் வீரத்தமிழர்களுக்கு வீரவணக்கங்கள் ....!

எம் உணர்வுகளால்
நடக்கும் இவ்வறப்போர்
ஆயுதப்போரை வென்றெடுக்கும்
வெற்றியின் தூண்டுகோல்....!

சிதைக்கப்பட்டவை
உடல்களும் உரிமைகளையும் மாத்திரமல்ல
உணர்வுகளையும்தான் ....!

பிணக்குவியலில் கூட
பீரங்கித் தாக்குதல் நடத்துகிறாயே
நீயென்ன பிறவியின் பிதற்றல்களா....?

திரும்பிய இடமெல்லாம்
கூக்குரல்
"மனித நேயத்தை மசிக்கும்
மகா எமனை மண்டியிடவைத்து
மக்களை காப்பாற்ற உதவிசெய்"
சொல்லும்முன்னே உதவியது எமதரசு
சிதைக்கப்பட்ட மக்களுக்கல்ல
சிங்கள வெறிநாய்களுக்கு ....!

முத்துகுமரன்
இறக்கவில்லை இறக்கடிக்கப்பட்டிருக்கிறான்
உணர்வுகளால்....
அவனுக்கான அஞ்சலி
இலட்சங்களில் கொடையல்ல
இலட்சிய கேள்விகளுக்கான விடை
தருமா இவ்வரசு ....?

அடுத்தவன் மனைவியை
அபகரிக்க ஆயுதசப்ளை
இந்தியா ஒளிர்கிறது...!
இதுவும்
சனநாயக நாட்டின் சாதனைகளே ....!

புழுதியில் புரண்டோடி விளையாடுமென
எதிர்பார்த்த எம்மகவு மடிந்தது
கருவறையே கல்லறையாய் ....!

மருத்துவமனையை கூட
மண்டையோட்டுத் தலமாக்கிய
மரண எமன்கள் ....!

பிஸ்டல்களின் பசிக்கு
பிஞ்சுகளை இறையாக்கிய
பிணந்தின்னி கழுகுகள் ....!

உணர்வுகளின் முழக்கம்
ஊரெங்கும் ஒலித்துவிட்டது
விடிவுகாலம் ஒன்றும்
வெகு தொலைவிலில்லை
வீணர்கள் வீழ்த்தப்படுவார்கள்
வீரர்கள் வெற்றி வாகை சூடுவர்
நாளைய விடிவு
உணர்வு நெஞ்சங்களின்
உரிமை விடியலாக விடியட்டும் ....!

எண்ணக்குமுறல்களை எடுத்துரைக்க
ஆகாயம் காகிதமானால்கூட
அடங்காது ஆதங்கம் ....!

எப்போதும் அரவணைப்பான்
எதிர்த்தால் முறியடிப்பான்....!

இவண்
உணர்வுகளின் ஓசை(உயிருள்ளவரை ஒலிக்கும்)
ஜெ.இ.பிரேம்குமார்,
கப்பிகுளம்.

Thursday, July 30, 2009

Wednesday, March 11, 2009

தேவேந்திரர்கள் படுகொலை செய்யப்பட்டனர்....!

சங்கரன்கோவில் அருகே சாமி கும்பிடுவதில் ஏற்பட்ட தகராறில் இரண்டு தேவேந்திர வாலிபர் கொல்லப்பட்டனர்.

சங்கரன்கோவில் அருகே உள்ள செந்தட்டி கிராமத்தில் முப்புடாதியம்மன் கோவில் உள்ளது. இந்த கோயிலில் வழிபட்டு வந்த தேவேந்திர மக்களுக்கும், இன்னொரு பிரிவினருக்கும் இடையே பிரச்சனை இருந்து வந்தது. இந் நிலையில் மார்ச் 6ம் தேதி ஒரு சமூகத்தினர் பேச்சு வார்த்தைக்கு முன் வராததால் தேவேந்திர மக்கள் கோவிலுக்கு சென்று வழிபடலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதையடுத்து திருவிழா ஏற்பாடுகளை தேவேந்திர மக்கள் செய்து வந்தனர். இதற்கு காவல்துறை பாதுகாப்பு வழங்கவில்லை. திருவிழா ஏற்பாடுகளால் இன்னொரு பிரிவினர் ஆத்திரமடைந்துள்ளனர். இதனால் திருவிழா பணிகளில் ஈடுபட்ட கருப்பசாமி, ஈஸ்வரன், பரமசிவம், சுரேஷ் உள்ளிட்டோரை அவர்கள் பயங்கர ஆயுதங்களால் தாக்கியுள்ளனர்.

இதில் சம்பவ இடத்திலேயே பரமசிவம், ஈஸ்வரன் ஆகியோர் உயிரிழந்தனர். சுரேஷ் பலத்த காயமடைந்தார். தமிழக அரசும், காவல்துறையும் முன்னேச்சரிக்கையுடன் செயல்படாததால் தேவேந்திரர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

இது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன் கூறுகையில், இது மிகுந்த கண்டனத்துக்கு உரியது. கொலை வெறி தாக்குதல் நடத்தியோர் மீது தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

ரூ. 5 லட்சம், அரசு வேலை வழங்க வேண்டும்...

புதிய தமிழகம் கிருஷ்ணசாமி கூறுகையில், கோவிலில் மூன்று சமூதாய மக்கள் வழிபாடு நடத்த சட்டரீதியான பாதுகாப்பு வழங்காமல் பேச்சுவார்த்தையை நீடித்ததுதான் கொலைக்கு காரணம்.

இந்த சம்பவத்தில் சாதாரண கிராம மக்கள் ஈடுபடவில்லை. கூலிப்படையினரும் சம்பந்தபட்டு இருக்கிறார்கள். செந்தட்டி கிராமத்தில் திட்டமிட்டு மோதலை உருவாக்க சிலர் முயற்சி செய்வதாக தெரிகிறது. இங்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. அரசு உரிய பாதுகாப்பு, உரிமைகளை வழங்க வேண்டும்.

கொலை செய்யப்பட்டவர்கள் குடும்பத்திற்கு ரூ. ஒன்றரை லட்சம் மட்டுமே அரசு வழங்கியிருக்கிறது. அவர்களுக்கு ரூ. 5 லட்சமும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும். கிராமத்துக்கு செல்ல மக்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றார் கிருஷ்ணசாமி.

Tuesday, March 3, 2009

பெண்கள் அனைவரும் படையினருக்கு விருந்தாகட்டும்: ஆண்களின் இரத்தத்தினால் இந்து சமுத்திரம் சிவப்பாகட்டும்

வன்னியில் உள்ள மக்களை இலக்கு வைத்து சிறீலங்கா அரசாங்கம் தொடர்ச்சியான தாக்குதல்களை மேற் கொண்டு வருகின்றது. வன்னியில் இருந்து இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வந்துள்ள மக்களை தெரிவு செய்து இளம் பெண்கள் தனியாகவும் ஆண்கள் தனியாகவும் குழந்தைகள் பெண்கள் தனியாகவும் பிரிக்கப்படுகின்றனர். இவ்வாறு தனிமைப்படுத்தப்படுபவர்கள் பெருமளவானோர் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன், பெருமளவு பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். எஞ்சியுள்ளவர்கள் முகாம்களுக்கு கொண்டு செல்லப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களில் பெருமளவு ஆண்களும் இளம் பெண்களும் விசாரணைகளுக்காக என படையினரால் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இவ்வாறு கொண்டு செல்லப்பட்டவர்களின் பெற்றோர்கள் பிள்ளைகளை பறிகொடுத்து விட்டு கதறியழுதபடி உள்ளனர்.இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு வந்துள்ள பெண்கள் மீதான கொடுமைகள் ஒரு புறம் வேகமாக நடபெற்றுக் கொண்டிருக்க மறுபுறத்தில் வன்னியிலுள்ள மக்களை இலக்கு வைத்து பெருமளவு தினமும் படுகொலைகள் நடைபெற்று வரும் நிலையில் கடந்தவாரம் சிறீலங்கா பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச இராணுவத் தளபதிகள் மற்றும் உயர் அதிகாரிகள் மத்தியில் உளரீதியாக சோர்வடைந்துள்ள படையினரை உச்சாகப்படுத்தும் வகையில் ஆற்றிய உரையில் ”இனிமேல் முல்லைத்தீவில் அகப்படும் பெண்கள் அனைவரும் படையினருக்கு விருந்தாகட்டும் அங்கு அகப்படும் ஆண்களின் இரத்தத்தினால் இந்து சமுத்திரம் சிவப்பாகட்டும்’’ என்றும் கூறி படையினரை உசுப்பேத்தியுள்ளார். இதனைக் கேள்வியுற்று வவுனியா முகாமுக்குள் அடைபட்டுள்ள மக்கள் பதறிப் போயிருப்பதாக வவுனியாவில் உள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருடன் தொடர்பு கொண்டபோது அவர் இதனை எம்மிடம் தெரிவித்தார்.